Wednesday, June 26, 2019

தமிழின் இனிமை


செய்யுள்
தமிழின் இனிமை
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும் பனிமலர்
ஏறிய தேனும் காய்ச்சும் பாகிடை ஏறிய
சுவையும் நனிபசு பொழியும் பாலும்
தென்னை நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
-    பாரதிதாசன்

விடையளி
1.   தமிழின் இனிமை பாடலாசிரியர் யார்?
தமிழின் இனிமை பாடலாசிரியர் பாரதிதாசன்.

2.   பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி

3.   பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.

4.   பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
பாரதிதாசனின் பெற்றோர் கனகசபை, இலக்குமி அம்மையார்.

5.   பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் யாவை?
பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் பாவேந்தர், புரட்சிக்கவி.

6.   பாரதிதாசன் இயற்றிய வேறுநூல்கள் யாவை?
பாரதிதாசன் இயற்றிய வேறுநூல்கள் பாண்டியன் பரிசு, இருண்டவீடு, குடும்பவிளக்கு என்பன.



தமிழின் இனிமை

7.   பாரதிதாசன் பெயர்க்காரணம் யாது?
பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்

8.   தமிழின் இனிமை பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
தமிழின் இனிமை பாடல் பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

9.   பாரதிதாசன் எவற்றை எல்லாம் இனியன என்று கூறுகிறார்?
கனியின் சுளை, கரும்புச் சாறு, தேன், காய்ச்சிய பாகு, பசும்பால், இளநீர் இவற்றை இனியன என்று கூறுகிறார்.

10. பாரதிதாசன் எதனை தன் உயிர் என்று கூறுகிறார்?
பாரதிதாசன் தமிழை தன் உயிர் என்று கூறுகிறார்.


பொருள் கூறு
1.   கனி – பழம்
2.   கழை – கரும்பு
3.   நனி – மிகுதி
4.   நல்கிய – வழங்கிய

பிரித்து எழுதுக
1.   கழையிடை = கழை + இடை
2.   என்னுயிர் = என் + உயிர்
3.   கனியிடை = கனி + இடை

சேர்த்து எழுது
1.   பனி + மலர் = பனிமலர்.

11 comments: