கவிதை பட்டிமன்றம்
பிரித்து எழுதுக
1. நற்றமிழ்
= நன்மை + தமிழ்
2. செந்தமிழ்
= செம்மை + தமிழ்
3. கவியரங்கம்
= கவி + அரங்கம்
சேர்த்து எழுதுக
1. அறிவு
+ ஆயுதம் = அறிவாயுதம்
எதிர்ச்சொல்
1. புகழ்
x இகழ்
நிரப்புக
1. உலகம்
என்னும் பொருளை குறிக்காத ஒரு சொல் வானம்
அ) வானம் ஆ) அண்டம் இ) செகம்
ஈ)அகிலம்
2. வெளிச்சம்
இச்சொல்லைக் குறிக்காத ஒரு சொல் இருள்
அ) ஒளி ஆ) தெளிவு இ) விளக்கு
ஈ) இருள்
விடையளி
1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?
அப்துல் கலாம், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரை அறிவால் உயர்ந்தவர்களாக
இன்சுவை குறிப்பிடுகிறார்.
2. பண்பால் உயர்ந்தவர்களாக மதியொளி எவரையெல்லாம் குறிப்பிடுகிறார்?
புத்தரும், வள்ளுவரும் பண்பால் உயர்ந்தவர்களென மதியொளி குறிப்பிடுகிறார்.
1. உயிர் காக்கும் நெல்லிக் கனியை யார் யாருக்குக் கொடுத்தார்?
உயிர் காக்கும் நெல்லிக் கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தார்.
2. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் எழுதுக.
அறிவும் பண்பும் நம் இருகண்கள் அதனை நாம் பெற்று உலகை வெல்ல
வேண்டும் என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
3. ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும்
எழுது. கண்------
ஐம்பொறிகள் கண், மெய், வாய், செவி, மூக்கு
4. தமிழை சிறப்பிக்கும் பெயர்களை உம் பாடப்பகுதியிலிருந்து எடுத்து
எழுதுக.
தமிழை சிறப்பிக்கும் பெயர்கள் செந்தமிழ், நற்றமிழ், முத்தமிழ்.
No comments:
Post a Comment