Sunday, August 4, 2019

எதனாலே! எதனாலே!


எதனாலே! எதனாலே!
விடையளி
1.   வானவில் எப்படி தோன்றுகிறது?
வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.

2.   கடலில் ஏன் அலைகள் உண்டாகிறது?
பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால் கடலில் அலைகள் தோன்றுகின்றன.

3.   விண்மீன்கள் ஒளிர்வது எதனால்?
விண்மீன்கள் தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசிகின்றன.

4.   ரோஜாப்பூ ஏன் சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது?
ரோஜாப்பூவில் ‘ஆந்தோசைனின்’ என்ற நிறமி இருப்பதால் சிவந்த நிறத்தில் காணப்படுகிறது.

5.   இலைகள் மரத்திலிருந்து எதனால் உதிர்கின்றன?
கோடைக்காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன.

6.   மின்மினிப் பூச்சிகள் மின்னுவதற்கான காரணம் யாது?
லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.
7.   பறவைகள் பறக்க காரணம் யாது?
பறவைகள், பறக்க காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன.

8.   மின்னல் எதனால் மின்னுகிறது?
மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது.

9.   மேகம் கறுப்பாகத் தோன்றக் காரணம் யாது?
மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால் மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.


4 comments: