Sunday, August 4, 2019

படம் இங்கே! பழமொழி எங்கே?


படம் இங்கே! பழமொழி எங்கே?
பிரித்து எழுது
1.   மரப்பொந்து      -     மரம் + பொந்து
2.   அக்கரை        -     அ + கரை
3.   மணியோசை    -     மணி + ஓசை
4.   தேனிசை        -     தேன் + இசை

சேர்த்து எழுதுக
1.   சூறை + காற்று       -     சூறைக்காற்று
2.   கண் + இமைக்கும்    -     கண்ணிமைக்கும்
3.   அமர்ந்து + இருந்து    -     அமர்ந்திருந்து

பொருத்தமான சொல்லில் நிரப்புக
1.   யானைக்கும் அடி சறுக்கும்
2.   விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
3.   ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு
4.   ஆழம் தெரியாமல் காலை விடாதே
5.   ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

விடையளி
1.   பழமொழி என்பது யாது?
நம் முன்னோர்கள் தம் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகளை பழமொழி என்பர்.

2.   விடுகதை என்றால் என்ன?
ஒரு புதிருக்கு விடை காண்பது விடுகதை ஆகும்.

3.   கிளியைப் பழமொழிக்கிளி என அழைக்கக் காரணம் என்ன?
மாந்தோப்பில் கிளி காட்டும் படத்திற்கு சரியான பழமொழியை சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காயை பறித்துப்போடும். அதனால் அதை பழமொழிக்கிளி என அழைப்பர்.

4.   இப்பாடத்தில் நீ அறிந்துக் கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடு.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
இக்கரைக்கு அக்கரை பச்சை.
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

No comments:

Post a Comment