Sunday, July 28, 2019

மூதுரை - அடக்கம் உடையார் அறிவிலர்


மூதுரை
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்க கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓருமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

விடையளி
1.   மூதுரையை இயற்றியவர் யார்?
மூதுரையை இயற்றியவர் ஒளவையார்.

2.   மூதுரை என்பதன் பொருள் யாது?
முதுமை + உரை = மூதுரை
பழமையான அறிவுரை என்பது பொருள்

3.   ஒளவையார் இயற்றிய வேறு நூல்கள் யாவை?
ஒளவையார் இயற்றிய வேறு நூல்கள்
கொன்றை வேந்தன்
நல்வழி
ஆத்திசூடி

4.   மூதுரையின் வேறுபெயர் யாது?
மூதுரையின் வேறுபெயர் வாக்குண்டாம்

5.   யாரை அறிவில்லாதவர் என எண்ணி விடக்கூடாது என ஒளவையார் குறிப்பிடுகிறார்?
தமக்குரிய காலம் வரும்வரை அடங்கி இருப்பவர்களை அறிவில்லாதவர் என எண்ணி விடக்கூடாது என ஒளவையார் குறிப்பிடுகிறார்.

6.   கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
கொக்கு தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன் வரும்வரை மடைத்தலையில் காத்திருக்கிறது.

1 comment: