Sunday, July 28, 2019

செய்யுள் – கடல்


செய்யுள் – கடல்
விடையளி
1.   கடல் பாடலாசிரியர் யார்?
கடல் பாடலாசிரியர் கவிமணி தேசிக விநாயகம்

2.   கவிமணி தேசிக விநாயகம் பிறந்த ஊர் எது?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் கவிமணி தேசிக விநாயகம் பிறந்த ஊர். ஆகும்.

3.   தேசிக விநாயகம் கவிமணி எனப் போற்றப்படக் காரணம் என்ன?
தேசிக விநாயகம் இனிமையும், எளிமையும் மிக்க பாடல்கள் எழுதியமையால் கவிமணி எனப் போற்றப்படுகிறார்.

4.   கடல் பாடல் இடம் பெற்ற தலைப்பு எது?
கடல் பாடல் இடம் பெற்ற தலைப்பு குழந்தை பாடல்கள் ஆகும்.

5.   கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?
முத்து, மீன், சிப்பி போன்றவை கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் ஆகும்.

6.   கடல் பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.
ë  இரவும் பகலும் அலை வீசும் கடலுக்கு ஓய்வு என்பது இல்லை.
ë  அலையோசை இடியோசை போல் உள்ளது.
ë  அலைகள் வருவது குதிரைகளின் அணிவகுப்பு போல் உள்ளது.
ë  மீன், முத்து, சிப்பி இவற்றைத் தந்து இப்பூமியில் மழை பெய்யவும் காரணமாகிறது கடல்.

No comments:

Post a Comment