Saturday, March 21, 2020

பழமொழிகள்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

இக்கரைக்கு அக்கரை பச்சை

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்

யானைக்கும் அடி சறுக்கும்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

ஆழம் தெரியாமல் காலை விடாதே

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்

ஆடிப் பட்டம் தேடி விதை

ஏரைத் தேடின் சீரைத் தேடு

No comments:

Post a Comment